Skip to content

மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன்… கோவை அருகே பரபரப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மரபேட்டை வீதியைச் சேர்ந்தவர் பாரதி 27 பெயிண்டிங் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி ஸ்வேதா 26 இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களாக குழந்தைகளுடன் ஏபிடி ரோடு பழனியப்பா வீதியில் ஸ்வேதா வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.

இன்று காலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த கணவன் பாரதி ஸ்வேதாவை கத்தியால் சராமரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஸ்வேதா சம்பவ

இடத்திலேயே உயிரிழந்தார்.

அப்போது அங்கு இருந்த மக்கள் தப்பி ஓட முயன்ற பாரதியை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் ஸ்வேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பாரதியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 ஆண்டுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கடந்த ஒரு வருட காலமாக கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் இந்த நிலையில் இன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை குத்தி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் இந்த சம்பவம் குறித்து பாரதியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!