Skip to content

தஞ்சையில் … கருணாசாமி கோயில் விசாகப்பெருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில்‌ என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது, இங்கு வசிஷ்டர் பூஜை செய்து வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் கோயில் என அழைக்கப்படுகிறது, இங்குள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி என்றும், இறைவி பெரியநாயகி, திருபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறது. தேவாரப்பாடல் பெற்ற வைப்புத் தலமாகவும் உள்ளது,இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா நேற்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது, வசிஷ்டேஸ்வரர், பெரிய அம்மன் சுவாமிகள் கொடிமரம் முன்பு எழுந்தருள, கொடிமரத்திற்கு திரவிய பொடி, மஞ்சள், தயிர், பால், சந்தனம் ஆகிய அபிஷேக பொருட்களால் சிவாச்சாரியார்கள் அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து நந்தி உருவம் பொறித்த கொடியை மேள தாளங்கள், சிவகணங்கள் முழங்க கொடிமரத்தில் ஏற்றினர், இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!