Skip to content

திருச்சியில் சுமை பணி தொழிலாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பல தலைமுறையாக சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். சுமை தூக்கும் தொழிலாளர்கள் கடந்த 25ஆண்டு காலமாக சங்கம் அமைத்து கூலி உயர்வு, போனஸ் ,பணி பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைகளை போராடியும், தொழிலாளர் துறைமூலமாகவும் பெற்று வந்தனர். இந்நிலையில் வேஸ்ட் பேப்பர் கடை முதலாளிகள் மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்து கொள்ளலாம் என தொழிற்சங்கத்திற்கு தெரியாமல் ரகசியமாக உத்தரவு பெற்றுள்ளனர்.

அந்த உத்தரவில் 20 ஆண்டு காலம் அங்கு வேலை செய்யும் 42 தொழிலாளர்களை வெளியேற்றவோ, வேலை நீக்கம் செய்யவோ எந்த உத்தரவும் இல்லை. இந்நிலையில் திருச்சி மாநகர காவல்துறை சட்டவிரோதமாக இந்த தொழிலாளி, முதலாளி பிரச்சனையில் உள்ளே நுழைந்து பீகார் மாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு

அமர்த்தியுள்ள முதலாளிகளுக்கும், பீகார் தொழிலாளர்களுக்கும், நூற்றுகணக்கான போலீசை நிறுத்தி பாதுகாப்பு கொடுத்து வருகிறார்கள். இந்த செயலை கண்டித்தும் இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பல ஆண்டுகாலமாக வேலை செய்த தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காந்தி மார்க்கெட் அனைத்து சுமைப்பணி தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று காந்தி மார்க்கெட் தர்பார் மேடு பகுதியில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் தக்காளி பாரதி, ரமேஷ் தலைமை வகித்தார். சி.பி.எம் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா கருப்புக்கொடியை ஏற்றி கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி சிபிஎம் மலைக்கோட்டை பகுதி செயலாளர் ராமர்,சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், எல்எல்எப் சங்க மாவட்ட அமைப்பாளர் தக்காளி செந்தில்ஆகியோர் பேசினர். இதில் சங்க நிர்வாகிகள், சுமைப்பணி தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!