Skip to content

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் 2 நாள் மாநாடு.. முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்..

தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜன.7, 8-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்காக பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று காலை 10 மணிக்கு மாநாடு தொடங்குகிறது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றவுள்ளார். தொடக்க விழாவில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழக தொழில்துறை அமைச்சர்டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரையும், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நன்றியுரையும் நிகழ்த்தவுள்ளனர். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க், தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 35 நாடுகளில் இருந்து பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்கின்றன.

இதன் மூலம் தமிழகத்துக்கு ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்கவும், 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை பெறும் செயல்திட்டத்தை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!