Skip to content

ஐபிஎல்: இன்று 2 போட்டிகள்,மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா சிஎஸ்கே?

 ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. ரிஷப் பந்த் தலைமயி​லான லக்னோ அணி​யும் 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது.

கொல்​கத்தா அணி தனது கடைசி ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை 80 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது. அதேவேளை​யில் லக்னோ அணி தனது கடைசி ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணியை 12 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வென்​றிருந்​தது.

அடுத்த போட்டி   சண்டிகரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.  இதில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகிறது.  சென்னை அணி இதுவரை 4 போட்டிகளில் ஆடி  1 வெற்றியை மட்டும் பெற்றுள்ளது.  பஞ்சாப் அணி 3 போட்டிகளில் ஆடி 2 வெற்றிகளை பெற்றுள்ளது.  சென்னை அணி இன்று மீண்டும் வெற்றிகணக்கை தொடங்குமா என்ற எதிர்பார்ப்பில்  சிஎஸ்கே ரசிகர்கள் உள்ளனர்.

நேற்று இரவு மும்பையில் நடந்த போட்டியில் மும்பையும், பெங்களூரு ஆர்சிபியும் மோதியது. இதில்  முதலில் ஆடிய பெங்களூரு 20 ஓவர் முடிவில்  5 விக்கெட் இழப்புக்கு  221 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய மும்பை  20 ஓவா் முடிவில் 9 விக்கெட் இழந்து,  209 ரன்களே எடுத்தது. இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில்  பெங்களூரு வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில்,  கடைசி ஓவரை வீசிய குர்னால் பாண்டியா வீசினார். அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி  வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். குர்னால் பாண்டியாவின் அபார பந்து வீச்சு,   பெங்களூரை  வெற்றிக்கு அழைத்து சென்றது. நேற்றைய போட்டி  ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது.

 

error: Content is protected !!