Skip to content

ஐபிஎல் மீண்டும் 17ல் தொடக்கம்- ஜூன் 3ல் பைனல்

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் பதற்​றம் நில​வியதை தொடர்ந்து கடந்த 8-ம் தேதி 18-வது ஐபிஎல் தொடர் பாதி​யிலேயே நிறுத்​தப்​பட்​டது. அன்​றைய தினம் பஞ்​சாப் – டெல்லி அணி​கள் இடையி​லான ஆட்​டம் தரம்​சாலா​வில் நடை​பெற்று கொண்​டிருந்​தது. 10.1 ஓவர்​களில் இந்த ஆட்​டம் நிறுத்​தப்​பட்டு மைதானத்​தில் இருந்த ரசிகர்​கள் பாது​காப்​பாக வெளி​யேற்​றப்​பட்​டனர். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் ஒரு​வார காலத்​துக்கு நிறுத்தி வைக்​கப்​படு​வ​தாக பிசிசிஐ அறி​வித்​தது.

அதன்படி வரும் 17ம் தேதி முதல் எஞ்சியிருக்கும் போட்டிகளை ஆறு இடங்களில் நடத்துவது என்றும், ஜூன் 3ம் தேதி இறுதிப் போட்டியை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ப்ளே ஆப் போட்டிகளுக்கான தேதிகள்

குவாலிஃபையர் 1 – மே 29
எலிமினேட்டர் – மே 30
குவாலிஃபையர் 2 – ஜூன் 1
ஃபைனல் – ஜூன் 3

போட்டிகள் நடக்கும் ஆறு இடங்கள் எவை என்பது குறித்த தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

error: Content is protected !!