Skip to content

மாதாபுரத்தில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மாதாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் புனித லூர்து அன்னை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 300 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட காளைகள் மற்றும் காளையர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு வீரர்கள் அடக்கினர். பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும், மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும் 1000 முதல் 10,000 வரை ரொக்கம், ட்ரெஸ்ஸிங் டேபிள், பீரோ, கட்டில் சைக்கிள், சில்வர் குவளை உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. காயம் பட்ட வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கினார்.
error: Content is protected !!