Skip to content

மயிலாடுதுறை… கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி…

கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி மயிலாடுதுறையில் துவங்கியது.
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள பிரம்மாண்ட விழா அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியினை தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் நிவேதா முருகன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் நகர மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ்
மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் திமுக பொறுப்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கண்காட்சி பார்த்து செல்கின்றனர் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும் தொடர்ந்து ஐந்து நாட்கள் கண்காட்சி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!