தமிழ்நாட்டில் இருந்து 6 உறுப்பினர்களை தேர்வுசெய்ய வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமன தாக்கல் கடந்த 2ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இதில் திமுக கூட்டணி சார்பில் கமல், வில்சன், சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும் அதிமுக சார்பில் வக்கீல் இன்பதுரை, தனபால் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சுயேச்சைகள் 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அத்துடன் அரசியல் கட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களும் ஏற்கப்பட்டன.
12ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள். அன்று மாலை 3 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 6 பேரை தேர்வு செய்ய 6 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருப்பதால் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக 12ம் தேதி முறைப்படி அறிவிக்கப்படுவார்கள்.