தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ரூ.1,194 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
முன்னதாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர்களையும் முதல்வர் வழங்கினார். கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் முதல்வர் பார்வையிட்டார்.
விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
தஞ்சை விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. ராஜராஜ சோழன் ஆட்சி செய்த சோழ நாட்டு காற்றை சுவாசிக்கும்போது தெம்பு வருகிறது. கல்லணையை நேற்று திறந்து வைத்தேன். இப்படி மேட்டூர் அணையையும், கல்லணையையும் திறந்து வைத்த முதல், முதல் அமைச்சர் நான் தான் என சொன்னார்கள். அவர்களின் மகிழ்ச்சியை இன்னும் அதிகரிக்க சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
2021 – 22 முதல் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கு குறுவை தொகுப்பு திட்டமாக ரூ. 82 கோடிேய7 7 லட்சம் ஒதுக்கப்படுகிறது. டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கும் தொகுப்பு வழங்கப்படுகிறது. டெல்டா அல்லாத மாவட்டகளில் இதன் மூலம் 8 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டம் ரூ. 132 .17 கோடியில் வழங்கப்படும்.
கோவி செழியன் அமைச்சரான பிறகு அவரது மாவட்டத்தில் நடக்கும் முதல் அரசு நிகழ்ச்சி இது. பஸ்ட், பெஸ்டா செய்திருக்கிறார். சட்டக்கல்லூரி மாணவராக தொடங்கி உழைத்து இன்று அமைச்சராக உயர்ந்து உள்ளார். அவர் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்.
இந்த விழாவை சிறப்பாக அமைத்து தந்த கலெக்டர் பிரியங்கா பங்கஜத்துக்கும் என்னுடைய பாராட்டுக்கள். கஷ்டப்பட்டு படித்து சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஆட்சியர். அவர் தனது அம்மாவின் பெயரையும் சேர்த்து தன் பெயரோடு வைத்துக்கொண்டு பெருமை படுத்துகிறார். ஆட்சியருக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்.
பழைய பஸ் நிலையம் அருகே கலைஞர் சிலையை நேற்று திறந்து வைத்தோம். ஒருங்கிணைந்த தஞ்சையின் மண்ணின் மைந்தர். பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழா நடத்தியவர். ராஜராஜ சோழன் சிலை அமைத்தவர். காவேரிக்காக போராடியவர். காவிரி ஆணையம் அமைக்க காரணமானவர். இடைக்கால தீர்ப்பு, இறுதி தீர்ப்பு பெற்றவர்.
நானும் டெல்டா காரன் என்ற உணர்வோடு இங்கு நிற்கிறேன். ஏராளமான திட்டங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு தரப்பட்டு உள்ளது. பட்டுக்கோட்டை புதிய பஸ் நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
2021ல் தஞ்சைக்கு வந்தபோது சரஸ்வதி மகாலை பார்வையிட்டேன், அப்போது அந்த நூலகத்திற்கு மானியம் அறிவிக்கப்பட்டது. இப்போது மேலும் சில சலுகைகளை அந்த நூலகத்துக்கு அறிவிக்கிகேறன். ஓய்வூதியம், கூடுதல் மானியத்தை அரசு வழங்கும். நூலக கட்டிட பராமரிப்பு செலவுகளுக்கும் கூடுதல் மானியத்தை அரசு வழங்கும். பழமை மாறாமல் ரூ.12.50 கோடியில் நூலகம் சீரமைக்கப்படும்.
தென்பெரம்பலூர் பகுதியில் வெண்ணாறு வெட்டாறு பிரியும் இடத்தில் புதிய பாலம் ரூ.42 கோடியல் அமைக்கப்படும்.
ஈச்சங்ககோட்டை முதல் வெட்டிக்காடு வரை சாலை மேம்படுததப்படும்.
தமிழ்நாட்டில் உள் ள ஒவ்வொரு குடும்பமும் திராவிட மாடல் அரசால் பயனடைந்து வருகிறது.
இதை எல்லாம் பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி புலம்பிக்கொண்டு இருக்கிறார். உட்கட்சி, கூட்டணி பிரச்னைகளை சமாளிக்க அறிக்கை விடுகிறார். நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தொகுதி வாரியாக சென்று மக்களிடம் மனு வாங்கினோம். அந்த மனுக்கள் என்னாச்சு என கேட்டு உள்ளார்.
எடப்பாடி செய்திகளை படிக்கமாட்டேன் என அடம் பிடித்து, அரைவேக்காடாக அறிக்கை விடுகிறார். நான் பொதுமக்களுக்கு விளங்கும் வகையில் அதனை விளக்க வேண்டும்.
ஆட்சிக்கு வருவதற்கு முன் பெறப்பட்ட மனுக்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டது. 5.57 லட்சம் மனுக்களுக்கு ‘100 நாளில் தீர்வு காண உத்தரவிட்டேன். இது அவருக்கு தெரியல .
பெட்டியின் சாவி தொலைஞ்சிட்டா என கேட்கிறார். நான் சொல்கிறேன். கடந்த 13ல் தினமலர் பத்திரிகை செய்தியை ஒரு எடுத்துக்காட்டா சொல்கிறேன். தினமலரை பற்றி உங்களுக்கு தெரியும்.
11ம் தேதி மேட்டூர் சென்றபோது யாழ்மொழி, அனிருத்தன் என்ற மாணவர்கள் என்னை சந்தித்து பள்ளிக்கு சுற்றுச்சுவர் கேட்டு மனு கொடுத்தார்கள். மாணவரை பார்த்ததும், வாகனங்களை நிறுத்திய முதல்வர், கன்னத்தை தட்டி வாழ்த்து தெரிவித்தார். 11.30 மணி வரை மாவட்ட கல்வி அதிகாரி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம். நங்கவள்ளி ஒன்றிய ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு. அந்த திட்டத்திற்கான உத்தரவு மறுநாளே பிறப்பிக்கப்பட்டது. ஒரே நாளில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தார்கள் என செய்தி வெளியிட்டு உள்ளனர்.
இ்னொன்றையும் இந்த இடத்தில் சொல்கிறேன். தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறை தீர்க்க ஜூலை 15 முதல் உங்களுடன் ஸ்டாலின், 3775 நகரங்களிலும், 6232 கிராமங்களிலும் என மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும். இதில் மருத்துவ முகாமும் நடத்தப்படும். கிராம பகுதிகளில் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் இந்த முகாமில் மனுக்கள் தரலாம். அக்டோபர் வரை முகாம்கள் நடக்கும். 45 நாட்களில் இந்த மனுக்கள் மீது முடிவு எடுக்கப்படும்.
எதிர்கட்சித்தலைவர் இப்படின்னா…….இன்னொரு பக்கம் ஒன்றிய அரசின் கைப்பாவையாக இருக்கும் ஆளுநர் ஒருபக்கம், தஞ்சை மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தேன்.
அந்த பல்கலைக்கழகத்திற்கு கலைஞர் பெயர் தான் வைக்கணும் என அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தினார்கள். எல்லோருடைய ஒப்புதலுடன் அந்த மசோதாவை கவர்னருகன்கு அனுப்பி வைத்தோம். அந்த மசோதாவுக்கு மட்டும் ஆளுநர் அவர்கள் இந்த தேதி வரை ஒப்புதல் தரல. ‘ உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் கவர்னர் மாறல. ஒன்றிய அரசு நிதி வழங்காவிட்டாலும் நாம் சாதனைகள் நிகழ்த்தி இருக்கிறோம்.
கவர்னர் அனுப்பியதும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தால், இந்த நிகழ்ச்சியில் புதிய பல்கலைக்கழகத்திற்கு அடி க்கல் நாட்டி இருக்கலாம். நாம் மே2 ல் மசேதா அனுப்பினோம். 40 நாள் ஆகியும் ஒப்புதல் தரல. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் அவரை சந்திக்க நேரம் கேட்டும் கொடுக்கல. ஒரு கவர்னருக்கு இதை விட வேறு என்ன வேலை இருக்க முடியும்.
ஒன்றிய அரசு நிதி ஒதுக்காமல் நம்மை வஞ்சிக்கிறது. 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் மிசாவை பார்த்தவன். ஆளுநரின் அடாவடி, ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை , நெருக்கடி தடைகளையும், எதிரிகளின் சதிகளையும் எல்லாம் முறியடித்து தான் இன்று முதலமைச்சராக நிற்கிறேன்.
எதிர்க்கட்சிகள் அவதூறு, ஆளுநர் அடாவடி, ஒன்றிய அரசு ஓரவஞ்சனை எல்லாம் முடிறியடிக்க உங்களின் நல்லாதரவை தொடர்ந்து தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.