Skip to content

கரூர்… அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்

உதவியாளர் சங்கம் சார்பில், மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்கிட வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும், நீண்ட காலம் பணி செய்து வரும் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர படுத்திட வேண்டும், பல்வேறு குளறுபடியை உருவாக்கும் THR திட்டத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!