கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அளித்துள்ளது. ஏற்கனவே டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் இருமுறை ஆஜராகி இருந்த நிலையில் மீண்டும் சம்மன்.
டில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை ஆஜராக ஆணையிட்டுள்ளது. கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்கிறது.

