கரூர் துயர சம்பவம்: கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிபிஐ விசாரணைக்காக 3 பெண் உதவி காவல் ஆய்வாளர்கள்,1 ஆண் உதவி காவலர் ஆய்வாளர், மற்றும் காவலர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் என 10 பேர் ஆஜராகி உள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமான விசாரணை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அதிகாரிகள் கரூர் தான்தோன்றி மலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தங்கி விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த நிலையில் பல்வேறு நபர்களுக்கு சமம் அனுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் பயன்படுத்திய மக்கள் சந்திப்பு பிரச்சார பரப்புரை பேருந்தை கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைத்து 8 மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தடவியல் துறை அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி டெல்லியில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி பல்வேறு விளக்கங்களை அளித்த நிலையில் மீண்டும் இன்று இரண்டாவது முறையாக சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்த நிலையில் கரூர் தான்தோன்றிமலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த மூன்று பெண் உதவி காவல் ஆய்வாளர்கள், 1 ஆண் உதவி காவல் ஆய்வாளர், மற்றும் காவலர்கள், ஆம்புலன்ஸ் உரிமையாளர் என 10 பேர் சிபிஐ விசாரணைக்கு தற்போது ஆஜராகி உள்ளனர்.
இதனால் இந்த வழக்கு விசாரணை தற்போது தீவிரமடைந்து உள்ளது என கூறப்படுகிறது.

