Skip to content

கரூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் ஆத்தூர் கிராமப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் ஆலயம் மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முதல் நாளான நிகழ்ச்சியான காவேரி ஆற்றங்கரையில் இருந்து புனித தீர்த்தம் கொண்டு வந்து பொதுமக்கள் வழங்கினார்.

அதனை தொடர்ந்து ஆலயம் அருகே பிரித்திகமாக சிவாச்சாரியார்கள் யாக குண்டங்கள் அமைத்து புனித

திருத்தத்திற்கு மூன்று கால யாக பூஜை நடைபெற்றது.

பின்னர் மேல தாளங்கள் முழங்க கலசத்தினை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு ஆலயத்தை சுற்றி வலம் வந்த பிறகு கோபுர கலசத்தை வந்தடைந்தது பின்னர் கோபுர பிரகாசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோபுர கலசத்திற்கு சந்தன பொட்டிட்டு மாலைகள் அணிவித்து மகா தீபார்தனை காண்பிக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கல்யாண வரதராஜ பெருமாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது கும்பாபிஷேக விழாவை காண கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!