Skip to content

கரூர் மாவட்ட நாதக நிர்வாகிகள் கைது…

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் கோவிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெய்வத் தமிழ் பேரவை மட்டும் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என சீமான் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் அரசு அனுமதி தராத நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வடலூர் செல்ல இருப்பதாக தகவல் தெரிந்ததன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து வருகின்றனர்.

கரூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் நன்மாறன் அலுவலகத்தில் நிர்வாகிகள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!