Skip to content

கரூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் பகவதி அம்மன் ஊஞ்சல் சேவை…ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் பங்குனி சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.

இந்நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் முத்துமாரியம்மன், பகவதி அம்மன் ஊஞ்சல் உற்ச சேவை காட்சியளித்தனர் . நிகழ்ச்சியை முன்னிட்டு முத்துமாரியம்மன் மற்றும் பகவதி அம்மன் உற்சவருக்கு சிறப்பு

பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஊஞ்சலில் முத்துமாரியம்மன், பகவதி அம்மனையும் கொலுவிருக்க செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் பூசாரி முத்துமாரியம்மன் மற்றும் பகவதி அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டினார். அதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் முத்துமாரியம்மன் மற்றும் பகவதி அம்மனை மனமுருகி வழிபட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!