Skip to content

கரூர் வேம்பு மாரியம்மன் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்…..

  • by Authour

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு நறுமண பூக்களால் அன்னை கர்ப்ப ரட்சாம்பிகை அலங்காரம் நடைபெற்றது பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காண்பிக்கப்பட்டு

நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு பஞ்ச கற்பூர ஆலத்தையுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமி அலங்காரத்தை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள், பொதுமக்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!