கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி தொழிலாளி செல்வராஜ்.வயது 55. இவரது மகள் திரிஷா வயது 19. டெக்ஸ் கூலி தொழிலாளி. இன்று காலை தனது வீட்டின் அருகில் உள்ள ரயில்வே இருப்பு பாதையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது கரூரிலிருந்து திருச்சி நோக்கி சென்ற சரக்கு ரயில் பெண் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் உடல் சிதறி
பலியானார். தகவல் அறிந்த திரிஷாவின் பெற்றோர்கள், உறவினர்கள், கிராம பொதுமக்கள் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து திருச்சி ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.