Skip to content

கவியருவியில் காட்டாற்று வெள்ளம்…. குளிக்கத் தடை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை  பெய்து வருகிறது.  நேற்று நள்ளிரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது..இதன் காரணமாக ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவியில் காட்டாற்று வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் தடுப்பு வேலிகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது எனவே  சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தற்காலிக தடை

விதிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு வரும் நீரின் அளவு சீரான பின்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் இந்நிலையில் அருவியல் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஆழியார் வனத்துறை சோதனை சாவடி உடன் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!