கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி ஒருவரை மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்துள்ளனர். மேலும், அவரது மனைவியான மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

