Skip to content

கரூரில் இடம் பிரச்னை.. கத்தி காட்டி மிரட்டியதாக பாஜக முன்னாள் நிர்வாகி கைது

  • by Authour
கரூர், செங்குந்தபுரம் பகுதியில் முன்னாள் பிஜேபி நிர்வாகி கோபி என்பவர் அலுவலகத்தில் அவரது தங்கை சுமிதா ஆகியோருக்கு செம்மடை அருகே உள்ள இடம் பிரச்சனை சம்பந்தமாக பேசி வந்தனர். இந்த நிலையில் அருகில் இருந்த முன்னாள் பிஜேபி பிரமுகர் கார்த்திக் கோபிக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் கோபமடைந்த கோபி அருகில் இருந்த அருவாளை எடுத்து சுமித்ராவை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் காயம் அடைந்த சுமித்ரா கரூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமித்ரா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பிஜேபி முன்னாள் நிர்வாகி கார்த்திக் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள கோபியை கரூர் நகர காவல் துறையினர் தேடி வருகின்றனர். உடன் பிறந்த தங்கையை அண்ணன் அறிவாளில் மிரட்டிய சம்பவம் கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
error: Content is protected !!