Skip to content

கடன் கேட்கும் அப்பாவிகளை குறிவைத்து நிலஅபகரிப்பு… மூத்த வழக்கறிஞர் பேட்டி

  • by Authour
கரூர் மாவட்டத்தில் கடன் கேட்கும் அப்பாவிகளை குறிவைத்து நில அபகரிப்பு அதிகரித்துவிட்டது என இந்திய கணசங்கம் கட்சியின் தலைவர் மூத்த வழக்கறிஞர் முத்துசாமி எஸ்.பி அலுவலகத்தில் மனு அளித்த பின்னர் பேட்டி. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் நடைபெற்று.கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், கடவூர் அருகே உள்ள மாவத்தூர் கிராமம், ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரது குடும்ப ஏழ்மையையும், அறியாமையையும் பயன்படுத்தி, மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலை ஓரமாக உள்ள சுமார் 2.34 ஏக்கர் விவசாய நிலத்தை அடமான பத்திரத்திற்கு ரூபாய் 14 லட்சம் பத்திரப்பதிவு செய்வதாக கூறி ஏமாற்றி, தரகம்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கிரைய பத்திரம் பதிவு செய்த அப்பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் கண்ணுச்சாமி ஆகியோர் நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெருமாளின் நிலத்தை அபகரிப்பதற்காக பலமுறை மிரட்டி வந்ததால், கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், வழக்குப் பதிவு செய்து கண்ணுச்சாமி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழ்நிலையில் பெருமாளின் குடும்பத்தைச் சேர்ந்த 32 பேர் ஒரே இடத்தில் வசித்து வருவதால் கண்ணுச்சாமி, ரவிச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலின் பேரில் ஒவ்வொரு நாளும் மர்ம நபர்களை அனுப்பி, இடத்தை காலி செய்ய வேண்டுமென மிரட்டி வருகின்றனர். இது தொடர்பாக இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதே போல பலரிடம் ரவிச்சந்திரன், கண்ணுச்சாமி ஆகியோர் கடவூர் சுற்றுவட்டார பகுதிகளில் நில அபகரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே போல கரூர் மாவட்டத்தில் நில அபகரிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
error: Content is protected !!