Skip to content

லீட்ஸ் டெஸ்ட்டில் இந்திய தோல்விக்கு காரணம் என்ன?

இந்திய  டெஸ்ட் கிரிக்கெட் அணி  இங்கிலாந்து சென்று உள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்றது.  இந்த டெஸ்ட் போட்​டி​யில் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 471 ரன்​களும், இங்​கிலாந்து 465 ரன்​களும் குவித்​தன. 6 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 4-வது நாள் ஆட்​டத்​தில் 96 ஓவர்​களில் 364 ரன்​கள் சேர்த்து ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக கே.எல்​.​ ராகுல் 137, ரிஷப் பந்த் 118 ரன்​கள் சேர்த்​தனர்.

 40.5 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 181 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை காரண​மாக ஆட்​டம் சிறிது நேரம் தடைபட்​டது.

22 நிமிடங்களுக்கு பிறகு மழை நின்ற பின்​னர் ஆட்​டம் தொடங்​கப்​பட்ட நிலை​யில் ஸாக் கிராவ்லி 126 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் முதல் சிலிப் திசை​யில் நின்ற கே.எல்​.​ராகுலிடம் பிடி​கொடுத்து வெளி​யேறி​னார். முதல் விக்​கெட்​டுக்கு ஸாக் கிராவ்​லி, பென் டக்​கெட் ஜோடி 42.2 ஓவர்​களில் 188 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து களமிறங்​கிய ஆலி போப் 8 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 8 ரன்​கள் சேர்த்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் போல்​டா​னார்.

இதைத் தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்​கி​னார். 54 ஓவர்​களில் இங்​கிலாந்து அணி 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 253 ரன்​கள் சேர்த்து வெற்​றியை நோக்கி பயணிக்க தொடங்​கியது. அந்த சூழ்​நிலை​யில் குறைந்​தது 42 ஓவர்​கள் மீதம் இருந்​தது. இங்​கிலாந்து அணி​யின் வெற்​றிக்கு மேற்​கொண்டு 118 ரன்​கள் தேவை​யாக இருந்​தது.

ஷர்​துல் தாக்​குர் வீசிய அடுத்த ஓவரில் அடுத்​தடுத்து 2 விக்​கெட்​களை வீழ்த்தி இங்​கிலாந்து அணிக்கு அழுத்​தம் கொடுத்​தார்.
அபார​மாக விளை​யாடி வந்த பென் டக்​கெட் 170 பந்​துகளில், 21 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 149 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஷர்​துல் தாக்​குர் வீசிய பந்தை கவர் திசை​யில் அடித்த போது  நித்​திஷ் குமார் ரெட்​டி​யிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்​கிய ஹாரி புரூக் லெக் திசை​யில் வீசிய பந்தை ஸ்டெம்​புக்கு பின்​புறம் தட்​டி​விட முயன்​றார். ஆனால் ரிஷப் பந்த் அற்​புத​மாக கேட்ச் செய்​தார்.

இதன் பின்​னர் கேப்​டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்​கி​னார். இங்​கிலாந்து அணி 58.3 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 269 ரன்​கள் எடுத்​திருந்த நிலை​யில் மீண்​டும் மழை குறுக்​கிட்​டது. அப்​போது இங்​கிலாந்து அணி​யின் வெற்​றிக்கு 102 ரன்​கள் தேவை​யாக இருந்​தது. குறைந்​தது 37.3 ஓவர்​கள்​ மீதம்​ இருந்​தன. 30 நிமிடங்​களுக்கு பின்​னர் ஆட்​டம் மீண்​டும் தொடங்​கப்​பட்​டது. பிறகு 51 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில், ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஜேமி ஸ்மித் 44 ரன்கள் எடுத்தார். இப்படியாக 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

டெஸ்ட் அணி கேப்டன  கில் பதவியேற்றதும் முதல் டெஸ்ட் போட்டியில்   இந்தியா தோல்வி அடைந்து உள்ளது.  இந்த தோல்வி குறித்து கில் கூறும்போது,  2வது இன்னிங்சில்  இன்னும் கூடுதலாக  ரன்  சேர்த்து இருக்க வேண்டும்.  கடைசி 6 விக்கெட்டுகளும் மளமளவென சரிந்து விட்டது எதிர்பார்க்காத ஒன்று என கூறி உள்ளார்.

பொதுவாக இந்த அணி பல புதுமுகங்களை உள்ளடக்கியது. தோல்வி மூலம் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்றாலும், முழுக்க முழுக்க மோசமான  ஆட்டத்தால் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது.

ஜெய்ஸ்வால், இந்த வயதிலேயே கவனக்குறைவாக மைதானத்தில் நிற்கிறார். பீல்டிங்கில் இருப்பவர்  ஒவ்வொரு வினாடியும் உஷாராக இருக்க வேண்டும்.  ஆனால் அவர் கையில் கிடைத்த 3 கேட்ச்களை கோட்டை விட்டார்.

இரண்டாவது இன்னிங்சில்,  கருண் நாயர் பந்தை பிடிக்க முயன்றபோது கீழே விழுந்தார்.  சின்னகுழந்தை விழுந்து விட்டால், யாராவது தூக்கி விட வருவார்கள் என எதிர்பார்ப்பது போல  கீழே கிடந்தார்.  எழுந்து ஓடி பந்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு வரவில்லை.

இதை சரியான நேரத்தில் ஜடேஜா மைதானத்திலேயே கண்டித்ததை காணமுடிந்தது. கீழே விழுந்து விட்டால் அப்படியே கிடப்பியா, எழுந்து போய் பந்தை பிடி என்றார்.

விக்கெட் கீப்பர்  பண்ட்டும் தன் பங்குக்கு  சொதப்பிக்கொண்டிருந்தார். இப்படியாக ஒட்டுமொத்த அணியும் மோசமாகத்தான் ஆடியது.

அடுத்த  டெஸ்ட் போட்டி  ஜூலை 2ம் தேதி பர்மிங்ஹாமில் நடக்கிறது.   தவறுகளை திருத்திக்கொண்டு  இந்த போட்டியில்  இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்ப்போம்.

 

 

error: Content is protected !!