நாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் மற்றும் பழங்குடி இன மக்களை பாதுகாத்து வந்த மாவோயிஸ்டுகள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த நிலையில் சுமார் 27 பேர் மீதான படுகொலையை கண்டித்தும், நீதி விசாரணை நடத்தகோரியும் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை சிபிஐ (எம்) மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், உலக தமிழர் பேரமைப்பு துணை தலைவர் அய்யனாபுரம் முருகேசன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநில துணை தலைவர் அருணாச்சலம், வி.சி.க. மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசங்கர், தமிழக மக்கள் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தங்க. குமரவேல், ஐயூஎம்எல் மாவட்ட செயலாளர் ஜெய்னுல்ஆபுதீன், ம.ஜ.இ.க. இணை செயலாளர் ராவணன், தஞ்சை நஞ்சை லாவணி கலைக்குழு சாம்பான், ம.ஜ.இ.க. மாவட்ட அமைப்பாளர் மணிவேல் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதில் நிர்வாகிகள் சேவையா, தேவா, லட்சுமணன், யோகராஜ், தமிழ்ச்செல்வன், தாமஸ், மாரிமுத்து, ஜெயராஜ், மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
