Skip to content

மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம்.. தவெக தலைவர் விஜய் அழைப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு,முதலில், இந்த மாநாடு ஆகஸ்ட் 25, 2025 அன்று நடைபெறும் என கட்சித் தலைவர் நடிகர் விஜய் அறிவித்திருந்தார். ஆனால், காவல்துறையினர், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை காரணம் காட்டி, மாநாட்டை வேறு தேதியில் நடத்துமாறு கோரியதை அடுத்து,  தேதி மாற்றம் செய்யப்பட்டது.

அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21ஆம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று. மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல்

Image

உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறுவதற்கான வேலைகள் மும்மரமாக போய்க்கொண்டு இருக்கும் சூழலில், தொண்டர்களுக்கு விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது பதிவில் ” நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்… இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால் கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்… வர்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்… இந்தச் சூழல்ல நம்மோட இரண்டாவது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 (21/08/2025) வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.

முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில், நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு. ஜனநாயகப் போர்ல அவங்கள் வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு…

அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி… மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம். நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்” எனவும் தன்னுடைய அறிக்கையில் த.வெ.க தலைவர் விஜய் கூறியுள்ளார்.

error: Content is protected !!