உத்திர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம் பாசுமா பகுதியை சேர்ந்தவர் சந்தியா பரத்வாஜ். பெண் போலீசான இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்தவர் அங்கித் சவுகான். பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன.
அங்கித் சவுக்கானை விசாரணைக்காக சந்தியா அடிக்கடி கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டது.
இந்த நிலையில் மதுபான கடையில் நடந்த திருட்டு வழக்கில் அங்கித் சவுகான் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். சந்தியாவுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தனர். முசாபர் நகரை சேர்ந்த போலீஸ்காரரான அதுல் சர்மா என்பவருக்கும் இடையே கடந்த நாட்களுக்கு சில முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் இரு வீட்டாரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து முடித்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வந்தது. இதற்கிடையே மதுபான கடை கொள்ளை வழக்கில் ஜெயிலுக்கு சென்ற அங்கித் சவுகான் சில நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்தார்.
இதனையறிந்த சந்தியா காதலனை கரம்பிடிக்க முடிவு செய்தார். கடந்த சனிக்கிழமை சந்தியாவும், அங்கித் சவுகானும் வீட்டை விட்டு வெளியேறினர். மகள் வீட்டில் இல்லாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனார். அவர்களால் சந்தியா இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்பு கொண்ட போது சந்தியாவின் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. போலீசார் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் சந்தியா தனது. காதலனுடன் பக்சர் நகரில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சந்தியா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சந்தியா தன்னை யாரும் கடத்தவில்லை அங்கித் கவுகானுக்காக தானே வீட்டை விட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்தார்.
போலீசார் அங்கித் சவுகான் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதனால் அவரை பிரிந்து வர வேண்டும் என தெரி வித்தனர். ஆனால் சந்தியா அவர் மீது வழக்குகள் இருந்தாலும் அவரைத்தான் நான் காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். அவரது மனச்சிறையில் சிக்கி விட்டதாகவும், என்னால் அங்கித் சவுக்கானை விட்டு எங்கும் பிரிந்து வர முடியாது என பிடிவாதமாக தெரிவித்தார். இதனால் சந்தியாவின் திருமணம் நிறுத்தப்பட்டது.
பிரபல திருடனுடன் பெண் போலீஸ் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறியதால் திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

