Skip to content

மதுரை முத்து சிலை திறப்பு: மு.க. அழகிரி மகிழ்ச்சி

தமிழ்நாட்டில்  சென்னைக்கு  அடுத்ததாக இரண்டாவதாக உருவான மாநகராட்சி  மதுரை. 1971 மே 1ம் தேதி இந்த  மாநகராட்சி உருவானது. இதன் முதல் மேயர் மதுரை முத்து, நகராட்சி தலைவராக இருந்த அவர் அப்படியே மேயராக ஆனார். அதன் பின்னரும் ஒரு முறை மேயரானர்.

மதுரையில் திமுகவை வளர்த்தவர்களில் இவரும் ஒருவர்.  திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு பின்னர் அதிமுகவுக்கு சென்ற  மதுரை முத்து  பின்னர் திமுகவுக்கே வந்து விட்டார்.

அவருக்கு மதுரையில் முழு உருவ வெண்கல சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நாளை  முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதையொட்டி   முன்னாள் மத்திய அமைச்சரும்,  முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான  மு.க. அழகிரி   ஒரு வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவர் கூறியிருப்பதாவது:   மதுரை முன்னாள் மேயர் முத்து, ஆரம்ப காலத்தில் திமுகவின் வளர்ச்சிக்கு அதிகம் உதவியவர்.  அவரது உழைப்பு என்ன என்பது எனக்கு தெரியும். முத்துவுக்கு என்னுடைய தம்பி, முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது சிலை திறக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: என்று கூறி  உள்ளார். 

 

error: Content is protected !!