அரியலூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாகமங்கலம் கிராமத்தில் காமராஜர் நகர், காஞ்சனி கொட்டாய் பகுதியில் 3 தலைமுறைக்கு மேல் வாழ்ந்து வரும் எளிய மக்களை, நீர்நிலை புறம்போக்கு என்ற பெயரில் ஈவிறக்கம் இன்றி வீடுகளை இடிப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் நாகமங்கலம் கிராமத்தில் காமராஜர் நகர், காஞ்சிலி கொட்டாய் பகுதியில் 3 தலைமுறைக்கு மேல், கூரை வீடு, ஒட்டுவீடு, குடிசை வீடு கட்டி 68குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகளை,
நீர்நிலை புறம்போக்கில் வசிக்கின்றனர் என்று, புல்டோஷருடன் ஈவு இரக்கமின்றி வீடுகளை இடிப்பதை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், அரியலூர் அண்ணாசிலை அருகே, பெரும் திரல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய சங்க கிளை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் நாகராஜன் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினர்.
