Skip to content

மேட்டூர் அருகே ரவுடி வெட்டி கொலை….

மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவரது மகன் சிபி (25). இவர் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் மேட்டூர், கருமலைகூடல், மேச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் உள்ளன.

கருமலைக்கூடல் காவல் நிலையத்தில்  குற்ற பதிவேடு ரவுடி  பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. இந்நிலையில் இன்று இரவு சுமார் 11 மணியளவில் புதுசாம்பள்ளியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான பகுதியில் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். மேட்டூர் பகுதியில் நள்ளிரவில் ஒருவர் கொலை செய்யப்பட்டு  கிடக்கிறார்  என்ற தகவல் மட்டும் முதலில் போலீசாருக்கு கிடைத்தது. சுமார் ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு சம்பவ இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் ரவுடி சிபியின் உடலை பார்த்த அவரது பெற்றோர்கள் கதறி அழுதனர். இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப விடாமல் போலீசாருடன்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி கருமலைக்கூடல் மாரியம்மன் கோவில்  திருவிழாவில் ஒரு கொலை நடைபெற்றது. அந்த கொலை வழக்கில்  ரவுடி சிபி தொடர்புடையவர் என்பதால் பழிக்கு பழிவாங்க, அவர்  கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில்  கூறப்படுகிறது. நள்ளிரவில் பழிக்கு பழி தீர்க்கும் விதமாக மேட்டூரில் ரவுடி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!