Skip to content

பால் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பசும்பாலின் கொள்முதல் விலையை 42 ரூபாயாகவும் எருமை பாலின் கொள்முதல் விலையை 51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டி பசும்பாலை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்தனர் ஆர்ப்பாட்டத்தின் போது கால்நடை தீவனம் முன்பு போல் மானிய விலையில் வழங்க வேண்டும் எனவும் பாலுக்கு ஒன்றியத்தின் மூலம் ஊக்கத்தொகை வழங்க

வேண்டும் எனவும் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, துறையூர் உப்பிலியபுரம் தாப்பேட்டை முசிறி ஒன்றியங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட விவசாயிகள் துணைத் தலைவர்
மணிவேல் குணசேகரன் ராஜேந்திரன் ராமசாமி லோகநாதன் உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!