தமிழக முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று வருகை புரிகிறார். அதன் காரணமாக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எவ. வேலு திருப்பத்தூர் மாவட்டத்திலேயே தங்கி அனைத்து வேலைப்பாடுகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில்
அமைந்துள்ள சித்ரா காபி என்ற பெயரில் உள்ள தனியார் டீ கடையில் அமைச்சர் எவ.வேலு டீ அருந்தினார். இந்த நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி டீக்கடையில் வேலை செய்யும் நபர்கள் அமைச்சரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.