Skip to content

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 8 வரை காவல் நீடிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அமலாக்கத்துறையினர் செய்த டார்ச்சர் காரணமாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.  பின்னர் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதைத்தொடா்ந்து அவர்  புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இன்றுடன் அமைச்சரின் காவல் காலம் முடிவடைவதால்,  செசன்ஸ் நீதிபதி அல்லி, அமைச்சருக்கு  ஆகஸ்ட் 8 வரை காவல் காலத்தை நீடித்து உத்தரவிட்டார். காணொலி மூலம் விசாரணை நடத்தி இந்த உத்தரவினை நீதிபதி பிறப்பித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!