Skip to content

கர்நாடக கூரியர் அலுவலகத்தில் பார்சலில் இருந்த மிக்சி வெடித்தது

கர்நாடக மாநிலத்தில் உள்ள கூரியர் அலுவலகம் ஒன்றில் பார்சல்களை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென மிக்ஸி பார்சல் ஒன்று வெடித்தது.
இதன் காரணமாக கூரியர் நிறுவன ஊழியரின் கைகால் முகம் உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவருக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூரியர் அனுப்பியவரின் முகவரி மற்றும் விவரங்களை பெற்றுள்ள காவல்துறையினர் இது நாசவேலைக்கான திட்டமா என்பது  குறித்தும்  விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கூரியர் அலுவலகத்தில் மின்கசிவு ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
  • வெப்துனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!