Skip to content

தாய், குழந்தை மரண வழக்கில் திருப்பம்.. கணவனே கொன்ற கொடூரம்

ஈரோடு, வெள்ளோட்டில் ஒன்றரை வயது ஆண் குழந்தையும், தாயும் உயிரிழந்த விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அருகே குழந்தையை கொன்று விட்டு இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில், திடீர் திருப்பமாக அவரது கணவரே இருவரையும் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. குழந்தையையும், மனைவியையும் கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் கவின் பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். கவின் பிரசாத்திடம் நடத்திய விசாரணையில் ம்னைவி அமராவதியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் இருவரையும் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து கவின் பிரசாத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

error: Content is protected !!