திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 54) இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன்( 35 ) மோட்டார் சைக்கிளில் அவரை மோதுவது போல் வந்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி அவரை கண்டித்தார் இதில் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தாயிடம் தகராறு செய்வதை பார்த்து ராஜேஸ்வரியின் மகன் சந்தோஷ் அங்கு வந்தார். பின்னர் ஏற்பட்ட மோதலில் ஞானசேகரன் ராஜேஸ்வரி மற்றும் அவரது மகனை அறிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றார் இதில் ராஜேஸ்வரியின் தலை காது மற்றும் அவரது மகனின் தலை கை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.
பின்னர் அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் இது குறித்து ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்தனர்.
