Skip to content

திருச்சியில் 15 நாள் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் முசிறி இளைஞர்…..

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த இளைஞர்   ஒருவர்    கோவை துடியலுர் பகுதியில்  வழிப்பறியில் ஈடுபட்டார். அவரை பிடித்த  போலீசார் கோவை  இளைஞர் நீதிக்குழுமம், முதன்மை நடுவர், முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.  இளைஞரின்  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு   அவர்   15 நாட்கள் தினமும் 8 மணிநேரம் திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு உதவிபுரிய வேண்டுமென்று முதன்மை நடுவர் உத்தரவிட்டார்.

தக்க அறிவுரையை வழங்கியும் இனிமேல் எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது என எச்சரித்தும், இன்று முதல் 15 நாட்களுக்கு, தினமும் 8 மணிநேரம் திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்குபிரிவில் போக்குவரத்தினை சீர்செய்திட உதவிபுரியுமாறு இளைஞருக்கு அறிவுரை வழங்கி அனுப்பினார்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணி முதல் ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை சிக்னல் பகுதியில் ஶ்ரீரங்கம் போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் இளைஞர் ஈடுபட்டார்.

தொடர்ந்து  15 நாட்களுக்கு மாம்பழச் சாலை மற்றும் திருவானைக்காவல் பகுதிகளில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் அந்தஇளைஞர் ஈடுபடுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!