Skip to content

வாலிபரை மிரட்டி டூவீலரை பறித்த மர்ம நபர்கள்.. திருச்சி க்ரைம்..

வாலிபரை மிரட்டி பைக் பறித்த மர்ம நபர்கள்

கள்ளக்குறிச்சி எடையூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (23). இவர் வேலை காரணமாக திருச்சி வந்தார். பஞ்சப்பூர் அருகே தனது நண்பர்களுடன் இவர் பைக்கில் வந்த போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் 2 பேர் இவரை வழிமறித்து மிரட்டி ,பைக்கை பறித்துக் கொண்டு தப்பினர்.இந்த நிலையில் அந்த மர்ம நபர்கள் பைக்கை அதே பகுதியில் போட்டுவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து எ.புதூர் போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

செல்போன் பறித்த 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர் மணிகண்டன் ( 33 ) . இவர் வேலை காரணமாக திருச்சி வந்தார் .இந்த நிலையில் சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே மது வாங்க சென்றபோது அங்கு வந்த மர்ம நபர் இவரிடம் இருந்து செல்போன் , பணத்தை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிந்தாமணியை சேர்ந்த குணா (19) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் அரியலூர் மாவட்டம் எலந்தகுடம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ( 37 )இவர் வேலை காரணமாக திருச்சி வந்தார் .அப்போது சிந்தாமணி வெனிஸ் தெரு அருகே இயற்கை உபாதையை கழிக்க சென்றபோது அங்கு வந்த இரண்டு சிறுவர்கள் இவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து
இரண்டு சிறுவர்களை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.

கணவருடன் தகராறு; இளம்பெண் திடீர் மாயம்

திருச்சி தாராநல்லூரைச் சேர்ந்தவர் வேலுசாமி (38) இவரது மனைவி நீலாவதி (35). இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தம்பதிக்இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்ற நீலாவதி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் குறித்த தகவல்களும் கிடைக்கவில்லை என தெரிகிறது. இது குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்

திருச்சி அரியமங்கலத்தில் பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு

திருச்சி அரியமங்கலம் இந்திரா தெருவை சேர்ந்தவர் இளங்குமார் ( 27 ) இவர் தன் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். அன்று இரவு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளிருந்த மூன்று கிராம் மதிப்புள்ள இரண்டு தங்க மோதிரங்கள் ,3 கிராம் மதிப்புள்ள ஒரு கைச்செயின், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் ரூபாய் பத்தாயிரம் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாட்டைச் சேர்ந்த வீரராசு ( 39 ) என்ற சரித்திர பதிவேடு ரவுடியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற வாலிபர் அதிரடி கைது

திருச்சி பாலக்கரை ரயில்வே குடியிருப்பு அருகே போதைப் பொருள் விற்பனை நடப்பதாக நேற்று பாலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் அங்கிருந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் பாலக்கரை முதலியார் சத்திரம் ஆலம் தெருவை சேர்ந்த பிரின்ஸ் (25) என்பதும், அவர் அங்கு கஞ்சா விற்றதும் தெரிந்தது. பாலக்கரை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் அவரிடமிருந்து கஞ்சா மற்றும் 50 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!