Skip to content

நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா…

நாகப்பட்டினம் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 16,ம் தேதி பந்தகால் முகூர்த்ததுடன் தொடங்கியது. 1,மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான இன்று அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது. காக்கா பிள்ளையார் கோயிலிருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு பூதட்டு ஏந்தியவாறு நெல்லுக்கடை

மாரியம்மன் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தை சென்றடைந்த பக்தர்கள், அங்கு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!