Skip to content

கரூர், மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணை, 98 மதகுகள் கொண்ட கதவணையில் 1 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கலாம். இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வரும் நிலையில்,

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி கதவணைக்கு நேற்று 25,795 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி

நீர்வரத்து அதிகரித்து 46,425 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் காவிரி ஆற்றில் 44,955 கன அடியும், தென்கரை வாய்க்காலில் 650 கன அடியும், கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் வாய்க்காலில் 20 கன அடியும் பாசனத்திற்காக திறக்கப்பட்டு வருகிறது. நீர்வரத்து இன்று அதிகரிப்பால் டெல்டா பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!