நீர்வளத் துறையின் சார்பில் லாடபுரம் பகுதியில் பொற்குணி ஆற்றின் குறுக்கே ரூபாய் 176. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியினை மாவட்ட கலெக்டர் க.கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் இன்று (9.2.2024) தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வை.வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் ஜி.சரவணன். உதவிப்பொறியாளார் தா.மருதமுத்து, லாடபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் பெ.சாவித்திரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

