Skip to content

என்எல்சி கேன்டீனில் சாப்பிட்ட 22 பேருக்கு வாந்தி, மயக்கம் …

நெய்வேலியில் உள்ள என்எல்சி கேன்டீனில் சுரங்கத்தொழிலாளர்கள் வழக்கம் போல் உணவு அருந்தினர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடல்நடக்குறைவால் பாதிக்கப்பட்ட 22 பேர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இந்நிலையில், சுரங்கத்தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவில் எலி கிடந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. உணவில் எலி கிடந்ததாக வெளியான போட்டோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!