தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என கமலஹாசன் கூறியதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தக்லைப் படம் 5ம் தேதி கர்நாடகத்தில் வெளியாக வேண்டும் என்றால் கமல் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என கன்னட வெறியர்கள் கூறினர்.அத்துடன் தக்லைப் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் கமல் 5ம் தேதி கர்நாடகத்திலும் தக்லைப் வெளியிட வேண்டும். அதற்கு பாதுகாப்பு வேண்டும் என கோரி பெங்களூரு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி நாக பிரசன்னா இன்று விசாரித்து கமல் பிற்பகல் 2.30 மணிக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் கமல் திரைப்படசங்கத்திற்கு தனது பேச்சு குறித்து விளக்கம்அளித்தார். ஆனால் தான் பேசியதில் தவறு இல்லை. எனவே மன்னிப்பு கேட்கமாட்டேன் என தெளிவாக கூறிவிட்டார்.
இந்த நிலையில் பிற்பகல் வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்பதில் என்ன ஈகோ உள்ளது என கேட்டார்.
அதற்கு கமல் தரப்பு, தவறு செய்யவில்லை. தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது , கன்னட மொழி மீது கமலுக்கு உள்ள பற்றை பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தது.
அதே நேரத்தில் கமல் கடிதம் திருப்தியாக உள்ளது என நீதிபதி கூறினார். மன்னிப்பு என்ற வார்த்தை அதில் இல்லை. மன்னிப்பு கேட்க சொன்னால் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள். வழக்கு விசாரணையை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதி கூறினார்.
திரைப்பட சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துகிறோம். அதில் உடன்பாடு ஏற்பட்டால் படத்தை கர்நாடகத்தில் வெளியிடுகிறோம் என கமல் தரப்பு தெரிவித்தது. எனவே 5ம் தேதி கர்நாடகத்தில் தக்லைப் வெளியாகாது.