Skip to content

பாமக கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.. எம்.எல்.ஏ சதாசிவம்

சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உறுப்பினர் அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கி, புதிய கிளைகளை உருவாக்குவதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் அன்புமணி ராமதாஸ் ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய பாமக எம்.எல்.ஏ சதாசிவம், “பாமக கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் 40 தொகுதிகளுக்கு மேல் கேட்போம். கட்சியில் தற்போது நிலவும் குழப்பங்கள் நீர்குமிழி போல தற்காலிகமானவைதான், விரைவில் இது முடிவுக்கு வரும். பாமகவுக்கு குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என நல்ல காலம் தொடங்கியுள்ளது” எனக் கூறினார்.
error: Content is protected !!