என்ஜினியரிங் கல்லூரி மாணவன் தற்கொலை
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமாராவ் மகன் துன்னாமகேஷ்(வயது21). இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். துன்னாமகேஷ் தனது செல்போன் மூலம் ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் பல்வேறு விளையாட்டுகளை கடன் வாங்கி விளையாடியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணத்தை இழந்ததுடன் அவ்வப்போது நண்பர்களிடம் இதுகுறித்து பேசி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற துன்னாமகேஷ் நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் எடுத்து கூறி கடன் தொகையை திருப்பி கொடுத்துள்ளார். இருப்பினும் பணத்தை இழந்த வேதனையில் இருந்த துன்னா மகேஷ் தனது நண்பர்கள் வாடகைக்கு தங்கி இருக்கும் விடுதி அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை கல்லூரி முடிந்து அறைக்கு வந்து பார்த்த நண்பர்கள், தங்களது நண்பர் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சமயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரெயிலில் 30 கிலோ கஞ்சா பறிமுதல்..
திருச்சி இருப்புப் பாதை எஸ்.பி ராஜன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி சக்கரவர்த்தி மேற்பார்வையில் திருச்சி இருப்புப் பாதை இன்ஸ்பெக்டர் ஷீலா, திருச்சி பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அஜய் குமார் மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் இன்று அதிகாலை திருச்சி இருப்புப் (RPF) பாதுகாப்பு படை காவலர்கள் இணைந்து நடத்திய சோதனையில் திருச்சி இருப்புப் பாதை நடைமேடை எண் 8 ல் புருலியாவிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற வண்டியில் சோதனை செய்து பார்த்தபோது பின்பக்க பொது பெட்டியில் கேட்பாரற்று சாக்கு பையில் கிடந்த 30 கிலோ மதிக்கத்தக்க தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கைப்பற்றி திருச்சி இருப்பு பாதை போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.
காந்தி மார்க்கெட் பகுதியில் கடையை .சேதப்படுத்திய 5 பேர் கைது
திருச்சி மே 4- திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மரக்கடை பகுதியில் கடை வைத்து நடத்தி வருபவர் நவ்ஷாத் அலி (வயது 44. )அதே பகுதியில் சின்னசாமி நகரை சேர்ந்த அண்ணாமலை (வயது 52) என்பவரும் கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு அண்ணாமலை மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் சேர்ந்து நவ்ஷாத் அலியிடம் தகராறில் ஈடுபட்டு கடையை சேதப்படுத்தி விட்டனர்.இந்த சம்பவம் தொடர்பாக நவ்ஷாத் அலி காந்தி மார்க்கெட் போலீசில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் அண்ணாமலை,
சீனிவாசன், மணிகண்டன், ரவிச்சந்திரன், சதாம் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.