நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘மாமன்’ படத்திற்குப் பிறகு, அவர் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு விழாவில் பேசிய சூரி…., சினிமாவில் வாய்ப்பு கிடைத்தபோது ஏற்பட்ட வலிகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கண்ணீர் மல்க நெகிழ்ச்சியடைந்தார். தனக்கு டிரஸ் அளவு எடுக்கும்போது கைகள் நடுங்கியதாகவும், திடீரென வேறொருவர் பரிந்துரைக்கப்பட்டதால் சட்டையைக் கழற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் அவர் உருக்கமாகக் கூறினார்.

