Skip to content

பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் முன்னாள் எம்பி சாமி தரிசனம்

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் சீனிவாச பெருமாள் திருக்கோவில் மற்றும் பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் திருக்கோவில் ஆகிய கோவில்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அஇஅதிமுக அமைப்பு செயலாளருமான மைத்ரேயன் குடும்பத்தினருடன் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். சீனிவாச பெருமாளுக்கும் , தங்கமுத்து மாரியம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் அர்ச்சனை செய்து வழிபட்டார். முன்னதாக முன்னாள் எம்.பி மைத்ரேயனை பாபநாசம் இறைப்பணி மன்ற தலைவர் குமார், பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன், பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபு, சமூக ஆர்வலர் சம்பந்தம் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!