அடையாளம் தெரியாத முதியவர் சடலம்.. போலீசார் விசாரணை
திருச்சி சத்திரம். கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள விழி இழந்தோர் பள்ளியின் அருகாமையில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என உடனடியாக தெரியவில்லை இதுகுறித்து தேவதானம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் வெள்ளை கலர் அரைக்கால் ரவுசர் அணிந்திருந்தார் வலது பக்க மார்பில் காயத் தழும்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இறந்தவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
மயங்கி விழுந்து பெயிண்டர் சாவு..
திருச்சி தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜன் (வயது61)பெயிண்டர் ஆக வேலை செய்து வந்தார்.
இவருக்கு நீரிழிவு நோய் மற்றும் இருதய நோய் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று சின்ன செட்டி தெருவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்து ரெங்கராஜன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
பாலக்கரையில் முதியவர் திடீர் சாவு
திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (வயது 67).இவர் தற்சமயம் மேலப்புதூரில் தங்கி வாழ்ந்து வந்தார் இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார் இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருச்சி பொன்மலைப்பட்டி பள்ளி அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கமிலாபானு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த ரெயில்வே காலனியை சேர்ந்த முருகானந்தம் (20) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதே போன்று திருச்சி சங்கிலியாண்டபுரம் டீக்கடை அருகில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ஞானசேகர் (35) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டு, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கைது செய்துள்ளனர்.
