Skip to content

ராமேஸ்வரம்-பனாரஸ் ரயில் புதுக்கோட்டையில் நின்று செல்ல உத்தரவு

திருச்சி துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள அறிக்கை: உ.பி. மாநிலம் பனாரசிலிருந்து புதுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்லும்  ரயில் வண்டி எண் 22536 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து புதுக்கோட்டை வழியாக பனாரஸ் செல்லும் வண்டி எண் 22535 புதுக்கோட்டையில் நின்று செல்ல வேண்டும் என்ற புதுக்கோட்டை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தேன்., இது தொடர்பான கோரிக்கையை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும் வந்தேன். அதற்கு பதில் அளிக்கும் வகையில் ரயில்வே துறை அமைச்சகம் ராமேஸ்வரத்திலிருந்து புதுக்கோட்டை வழியாக பனாரஸ் செல்லும் வண்டி எண் 22535 புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல உத்தரவிட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பி இருக்கிறது. எனது கோரிக்கையை நிறைவேற்றி தந்த ரயில்வே அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

error: Content is protected !!