தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2025 -26 இன் கீழ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரையின் பேரில், பேராவூரணி மற்றும் கூப்புளிக்காடு கிழக்குத் தெரு, முடப்புளிக்காடு-2 பிட், தார்ச்சாலை அமைக்கும் பணி ரூபாய் 1 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணியை புதன்கிழமையன்று, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினருமான நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் முன்னிலை வகித்தார். இதில், பேராவூரணி ஒன்றியக் கழகச் செயலாளர் க.அன்பழகன், நகரக் கழக செயலாளர் என்.எஸ்.சேகர், பேரூராட்சி துணைத் தலைவர் கி.ரெ.பழனிவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள் மு.த.முகிலன், பழனிவேல் சங்கரன், ரம்யா அரவிந்தன், மகாலட்சுமி சதீஷ்குமார், ராஜலெட்சுமி ராமமூர்த்தி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் செந்தில் குமரகுரு, துப்புரவு மேற்பார்வையாளர்கள் சிவசுப்பிரமணியன், வீரமணி மற்றும் கோ.செந்தில்குமார், நீலகண்டன், ரவி, பொறியாளர் இளையராஜா மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.