திருச்சி, திருவானைக்கோவில் மக்கள் வாழ்வாதாரம் கருதாமல் 2000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இனாம் சொத்துக்களை உரிமையாளர்களிடமிருந்து அபகரிக்க நினைக்கும் இந்து சமய அறநிலையத்துறை மீது திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். இந்த மனு அளிப்பின்போது திருவானைக்காவில் அடிமனை உரிமையாளர்களின் கூட்டமைப்பின் சார்பாக அதன் தலைவர் மாரி(எ) பத்மநாபன் மற்றும் திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் எஸ் கலைமணி பிரஸ் வெங்கடேசன் எஸ் கே ராஜு வைத்தியநாதன் ராஜகோபாலன் மெக்கானிக் பாஸ்கர் ராஜகோபாலன் திருவேங்கடம் யாதவ் பி என் ஆர் செல்வம் பாலசுப்பிரமணியம் தர்மலிங்கம் ராதாகிருஷ்ணன் மற்றும் திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

